Villupuram: ரூ. 2. 74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு.. வனத்துறை

Villupuram: விழுப்புரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 61, 469. 64 ஏக்கர் வனம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு தருவதற்காக தேக்கு, மா, ரோஸ்வுட், பூங்கான், வேம்பு மர கன்றுகளும், காடுகளில் வளர்க்க அத்தி, கொடுக்காபுலி, நிலங்களில் சவுக்கு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் கடந்தாண்டு பசுமை தமிழகம் திட்டம் மூலம் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், தமிழ்நாடு பல்லுாயிர் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தில் 2, 79, 534 மரக்கன்றுகள், தேசிய நெடுஞ்சாலை நிதியின் கீழ் 10, 000 கன்றுகளும், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா மூலம் 25, 000 மரக்கன்றுகள், நிலங்களில் 40 ஆயிரம் கன்று, பசுமை குழு மூலம் ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை இணைந்து 12, 500 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 2500 மரக்கன்றுகள் கூடுதலாக நடப்பட்டன. இதற்காக, ரூ. 97 லட்சம் செலவிட்டனர்.
வனத்துறையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதால், இந்தாண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், பசுமை தமிழகம் திட்டத்தில் 20 ஆயிரம் கன்றுகள், பல்லுாயிர் திட்டத்தில் 1, 94, 000 கன்றுகள், சிப்காட்டில் 30, 000, நிலங்களில் 20, 000 கன்று, பசுமை குழுக்கள் மூலம் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து 10000 மரக்கன்று என மொத்தம் 2. 74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.