Tindivanam : 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டி தூய்மைப்படுத்தபடும்

145

Tindivanam : திண்டிவனம் நகராட்சி பகுதியிலுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் துாய்மை படுத்தும் பணி நடந்தது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை துாய்மை படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதன் பேரில், திண்டிவனத்திலுள்ள ஜெயபுரம், ஓ. பி. ஆர். பூங்கா, இந்திரா நகர், வசந்தபுரம், பாரதிதாசன் நகர், செஞ்சி ரோடு ஆகிய இடங்களிலுள்ள நகராட்சி மேல்நிை நீர் தேக்க தொட்டிகளில் பழைய தண்ணீரை வெளியேற்றிவிட்டு, குளோரினேஷன் செய்யும் பணி நகராட்சி ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. துாய்மை படுத்தும் பணி 15 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

You might also like