Mailam அருகே மதுபாட்டில்கள் கடத்திய வந்த 2 பேர் கைது

திண்டிவனம் அருகே உள்ள Mailam போலீஸ் சரகத்துக்குட்பட்ட பஸ் நிறுத்தம் அருகில் மது விலக்கு போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த வழியாக சென்ற நான்கு சக்கர வாகனம் அங்கு இருந்த போலீசாரை கண்டதும் நிற்காமல் படுவேகமாக சென்றது. அதனை துரத்தி சென்ற போலீஸார் மடக்கி பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர். விசாரணையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே Mailam போலீசார் நான்கு சக்கர வாகனம் மற்றும் அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை மதுவிலக்கு போலீஸ் நிலையம் கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே, பள்ளிக்கரணையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்வது விசாரணையின் மூலம் தெரியவந்ததுள்ளது.
வாகனத்தில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பின் கைது செய்தனர்.