Vikravandi : கோர்ட் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

Vikravandi : விக்கிரவாண்டி புதிய நீதிமன்ற கட்டுமான வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் சத்திய நாராயணன், இளவரசன், ராஜசிம்ம வர்மன், ஜெயப்பிரகாஷ், தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், லட்சுமி, புஷ்பராணி, அகிலா,
முருகன், ராதிகா, ஈஸ்வரன், பாக்கிய ஜோதி, வினோதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சங்கரன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.