Tribal People : செஞ்சி அருகே பழங்குடியினர் போராட்டம்

Tribal People : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் மேல்ஒலக்கூர் ஊராட்சியில் 35 ஆண்டுகாலமாக குளத்து புறம்போக்கில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்கள் பட்டா வழங்கக்கோரி மேல்ஒலக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்