Union Minister: சாலைப் பணி விரைந்து முடிக்கப்படும் மத்தியமைச்சர் பதில்

Union Minister: மயிலம் தொகுதி எம். எல். ஏ. , சிவக்குமார் கடந்த செப்டம்பர் 10ம் தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியை டில்லயில் சந்தித்து அளித்த மனு: வி. கே. டி. , தேசிய நெடுஞ்சாலைப் பணி பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
குறிப்பாக விக்கிரவாண்டியிலிருந்து சேத்தியாதோப்பு வரை சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இந்த பகுதியில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பது முற்றிலும் நிறுத்த வேண்டும். இதேபோன்ற, திண்டிவனம் – கிருஷ்ணகிரி சாலையையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரிடமிருந்து அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் ‘என். எச். , 36, 45சி’யில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.