Vanur News – இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம்

Vanur News – இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம்
Vanur News – இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனத்தின் விழுப்புரம் கிளை தலைவர் திரு சம்பத் ஏழுமலை அவர்கள் தலைமையில் விழுப்புரம் கிளை மாவட்ட அலுவலகம் வானூர் வட்டம் வானூர் கிராமத்தில்
காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி விழுப்புரம் மாவட்ட முன்னாள் தலைவர் திரு எஸ் சுந்தர் அவர்கள் மற்றும் கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு கே நசீர் என்கின்ற பாரூக் வரவேற்று
இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனத்தின் நிறுவனத் தலைவர் திரு வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் மகன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் உயர்திரு வாழப்பாடி இராம சுகந்தன் உடன் புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் திரு ச.தனுசு அவர்களால் அலுவலகம் திறக்கப்பட்டது.
இடையப்பட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு விஸ்வநாதன், மற்றும் சித்தளம்பட்டு சி லட்சுமணன் அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டு இந்திய தேசிய கிராம தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு நந்தகுமார் அவர்கள் எந்தெந்த தொழிலாளர்களை இதில் உறுப்பினர் சேர்க்கலாம் என்ற சிறு ஆலோசனை வழங்கியதுடன்
மேற்படி சம்மேளனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானம் ஆட்டோ ஓட்டுநர்கள் தையல் தொழிலாளர்கள் சாலையோர வியாபாரிகள் சலவை முடி திருத்துனர் நெசவு தொழிலாளர்கள் கடைகளில் வேலை செய்பவர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவரையும்
மிழ்நாடு நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து அரசின் திட்ட உதவிகளை பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்படும் என்று இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் INRLF நகரத் தலைவர் திரு எம் கே ஏழுமலை அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்ற மற்றும் வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் கோட்டகுப்ப காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .