VAO மற்றும் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – Villupuram District

940

VAO மற்றும் குரூப் 4 – இலவச பயிற்சி வகுப்புகள்

VAO மற்றும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் VAO மற்றும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி துவங்கவுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ள VAO மற்றும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 13-ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்க உள்ளது.

இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெற விரும்புவோர் வருகின்ற 12ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி இலவச பயிற்சி வகுப்புக்கு பதிந்து கொள்ள வேண்டும்.

விழுப்புர மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த VAO மற்றும் குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பில் இனைய விரும்புவோர் உடனடியாக விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பதிந்து பயன்பெறுங்கள்.

 

தேசிய மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரம் மாணவர் சாதனை

Villupuram : தேசிய மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரம் மாவட்ட மாணவர் சாதனை முதலிடம் பிடித்து சாதனை.

தேசிய மல்லர் கம்பம் போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் மாணவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற இந்த மல்லர் கம்பம் போட்டி ராஜஸ்தான் மாநிலம் அனுமந்த் பகுதியில் நடைபெற்றது.

கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அளவில் 51 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 6 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மொத்தம் 60 மாணவர்கள் பங்கேற்றார்கள். விழுப்புரம், திருவள்ளூர் பல்கலைக்கழகத்திலிருந்து ஹேமச்சந்திரன், விஜய், புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தங்கம் வென்றார். நேற்று ராஜஸ்தானிலிருந்து வந்த ஹேமச்சந்திரனுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் போட்டியில் தங்கம் வென்ற ஹேமச்சந்திரன் அவர் பயிலும் விழுப்புரம் அரசு கல்லூரிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர் மஹாவிஷ்ணு, பொறியியல் துறைத் தலைவர் சக்திவேல், உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

தங்கம் வென்ற ஹேமச்சந்திரனை அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

 

அடிப்படை வசதியின்றி கபடி விளையாடிய மாணவர்கள்

விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டியில் அடிப்படை வசதி கூட செய்து தரப்படாததால் அலுவலர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பெரும்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி நடைபெற்றது.

கபடி போட்டியில் விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி உட்பட 32 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

villupuram students kabadi

மாணவர்களின் தேர்வில் குளறுபடி உள்ளதாகவும் மேலும் அடிப்படை வசதி கூட சரியாக செய்து தரப்படவில்லை என்றும் கூறி பெற்றோர்கள் அதிகாரிகளுடனும் அலுவலர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவர்களுக்கு நிழற்குடை வசதி கூட செய்து தரப்படவில்லை, இதனால் கொளுத்து வெயிலில் மாணவர்கள் உட்கார்ந்து அவதிப்பட்டனர் என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

You might also like