திண்டிவனத்தில் வேதாந்திரி மணவளக்கலை அறக்கட்டளை சார்பில் புதிய யோகா மையம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வேதாந்திரி மணவளக்கலை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான யோகா மையம் திறக்கப்பட்டது. இந்த யோகா மையம் திறப்பு விழாவானது திண்டிவனம் அப்பாசாமி நகரில் நடைபெற்றது.
யோகா என்பது மனதையும் உடலையும் ஒன்று சேர செயல்பட்டு மனிதனின் ஆற்றலை பெருகுவதற்கு உதவுகிறது. அந்த வகையில் மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் மேம்பட யோகாவானது உதவுகிறது.
மாணவர்களின் கற்றல் திறன், நினைவு திறன் ஆகியவற்றை உயர்த்துவதற்கு யோகா பயன்படுகிறது. இத்தகைய யோகா கலையை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிட புதிய யோகா மையத்தை வேதாந்திரி மனவளக்கலை அறக்கட்டளை திறந்துள்ளது.
அப்பாசாமி நகரில் நடைபெற்ற புதிய யோகா மைய திறப்பு விழாவில் அறக்கட்டளை தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கி புதிய யோகா மைய வளாகத்தை திறந்து வைத்தார்.
மேலும் வேதாந்திரி மணவளக்கலை அறக்கட்டளை -ன் செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். துணை பேராசிரியர் வேல்முருகன் யோகாசனங்களை செய்து அதன் நன்மைகளை எடுத்துரைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் அரிமா சங்க பொருளாளர் ஆனந்தகுமா,ர் வாசவி, சங்கத் தலைவர் பிரபாகரன், சேக,ர் செல்வராஜ், துர்காதேவி, வள்ளியம்மாள், அன்புமணி ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் சாணக்கியா கல்வி குழும தலைவர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். இறுதியாக கோபாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
இதுபோன்ற திண்டிவனம் மற்றும் விழுப்புரம் சார்ந்த செய்தி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு தகவல்களை உடக்குடன் தெரிந்துகொள்ள நம் திண்டிவனம் Facebook, Instagram, Youtube பக்கங்களை பின்தொடருங்கள். மேலும் நம் திண்டிவனம் Instagram பக்கத்தில் தினமும் கேட்கப்படும் வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு திண்டிவனம் சார்ந்த அறிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.