ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தோல்வி & ஒரு ஓட்டை மட்டுமே பெற்ற கட்சிகள்

653

Villupuram Urban Local Election Resuls:

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்த கட்சியும் எவ்வளவு இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

ஒரு சில கட்சிகள் ஒரு வாக்கை கூட பெறமுடியாமல் இருந்ததையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தோல்வி :

வானூர் அடுத்த கோட்டகுப்பம் நகராட்சியில் சுயேட்சைகளாக போட்டியிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தோல்வி அடைந்து இருப்பது அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Villupuram மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. அதில் அதிமுக திமுக பாமக பாஜக என அனைத்து  பெரிய கட்சிகளின் சார்பாக 145 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் சுயேட்சைகளாக 72 பேர் போட்டியிட்டனர்.

கோட்டகுப்பம் முன்னாள் தலைவர் அப்துல் அமீது அதிமுகவில் வாய்ப்பு கொடுத்தும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 5 வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த மற்ற 4 பேரும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டனர்.

15வது வார்டில் அப்துல் ஹமீதும் அவரது மகள் ராபியத்துல் பசிரியா 20ஆவது வார்டிலும் மகன் முகமது பாருக் 25ஆவது வார்டிலும் மருமகன் முபாரக் என்கின்ற முகமது பாரூக் இருபத்தி இரண்டாவது வார்டிலும் போட்டியிட்டனர்.

மேலும் மருமகள் ஹத்திஜா பீவி இருபத்தி ஏழாவது வார்டிலும் போட்டியிட்டார்.

நகராட்சி தேர்தலில் முடிவுக்காக காத்திருந்த அந்த குடும்பத்திற்கு தோல்வியே கிடைத்துள்ளது. அப்துல்ஹமீது உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.

சுயேட்சையாக நின்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தோல்வி அடைந்திருப்பது அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் அப்பகுதியில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

 ஒரே ஒரு ஓட்டை மட்டுமே பெற்ற கட்சிகள் 

வானூர் கோட்டகுப்பம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டை மட்டுமே பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 8வது வார்டில் போட்டியிட்டார்.

மேலும் இதே வார்டில் பாஜக வேட்பாளர் கனகராஜ் போட்டியிட்டார். இருவருமே ஒரே ஒரு ஓட்டை மட்டுமே பெற்றுள்ளனர்.

மேலும் இதே நகராட்சியில் 13 வது வார்டில் அதிமுக சார்பாக நின்ற முகமது சேட் வெறும் 5 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார். மேலும் இதே வார்டில் போட்டியிட்ட சுயட்சை ஆரிப் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று ஓட்டுகள் மட்டுமே பெற்ற கட்சி :

மேலும் மரக்காணம் பேரூராட்சியில் முக்கிய கட்சிகளான திமுக அதிமுக இரண்டுமே தோல்வியடைந்த நிலையில் பாஜக வேட்பாளர் வெறும் மூன்று ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

Villupuram, மரக்காணம் பேரூராட்சியில் 16 வது வார்டில் 6 பேர் போட்டியிட்டனர். திமுக அதிமுக பாஜக என பெரிய கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் இதில் சுயேச்சையாக நின்ற பிரபாகரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் பாஜக சார்பில் போட்டியிட்ட மாவட்ட துணைத் தலைவர் செல்வி 3 ஓட்டுகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இதுபோன்ற திண்டிவனம், விழுப்புரம் சார்ந்த அரசியல் செய்திகளுக்கு நம் திண்டிவனம் இணைய பக்கங்களை பின் தொடருங்கள்.

You might also like