இளம்பெண் தீக்குளித்து தற்கொலை | விழுப்புரம் செய்திகள்

709

விழுப்புரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

விழுப்புரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மனைவி இளவரசி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளவரசி சிகிச்சை பெற்று வந்தார்.

எவ்வளவு சிகிச்சை எடுத்தாலும் வயிற்றுவலி சரி ஆகாததால் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி இளவரசி தற்கொலை செய்துள்ளார்.

வயிற்று வலி தாங்க முடியாமல் இளவரசி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதனை அடுத்து அவரை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விவசாயி  தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த மேல்நெமிலி கிராமத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த பழனி விவசாயம் செய்து வந்துள்ளார். 52 வயதான பழனி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பக்கத்து நிலத்துக்காரர்கள் ஏழுமலை மாரிமுத்து. பழனி அவர்களது இடத்தில் மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்வேலியில் அவ்வப்போது ஆடுமாடுகள் சிக்கி இறந்து வந்துள்ளன.

இதுகுறித்து பழனி மற்றும் அவரது மனைவியை ஏழுமலை தரப்பினரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பழனி மார்ச் 22ஆம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார். மேலும் இது குறித்து அவர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருவெண்ணைநல்லூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் மேட்டுக்குப்பம் கூட்ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற திருக்கோவிலூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 61 லாட்டரி சீட்டுகள் மற்றும் 640 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

சாராயம் கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது

கோட்டக்குப்பம் அருகே சாராயம் கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாகன சோதனையின் போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை சோதனை செய்தனர். சோதனையில் 200 மில்லி லிட்டர் கொண்ட 490 சாராய பாக்கெட்டுகள் பிடிபட்டன.

tindivanam news mailam police arrested men for alcohol-smuggling-case

வேனில் வந்த இருவரிடமும் நடத்தப்பட்ட சோதனையில் புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிகுளத்தை சேர்ந்த கங்காதரன் மற்றும் கதிரேசன் என்பது அவர்கள் பெயர் என தெரியவந்தது.

இருவரும் புதுச்சேரியிலிருந்து சாராயபேக்கெட்டுகளை விழுப்புரம் மாவட்டத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்கள் கடத்தி வந்து சாராயபேக்கெட்டுகளையும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.

You might also like