Agriculture : விவசாயம் செழிக்க வேண்டி கும்மியடித்து வழிபட்ட பெண்கள்

152

Agriculture : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தையூர் கிராமமத்தில் பிரசித்தி பெற்ற வேம்பியம்மன் கோவில் உள்ளது. இங்கு, விவசாயம் செழிக்க வேண்டிபெண்கள் நெல் விதைத்து அந்த நெல் நாற்று வளர்ந்த உடன் அதை கடவுளுக்கு படைக்கும் திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14-ந்தேதி க காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் பெண்கள் நெல்விதைகளை விதைத்தனர். தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் 8-ம் நாள் விழாவில், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதோடு, நெல் நாற்றுகளையும் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர்.

பின்னர், விவசாயம் செழிக்க வேண்டி கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் சாமி திருக்கல்யாணமும், இரவுசாமி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான தென்னரசு மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள், ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.

You might also like