Avalurpettai: அவலூர்பேட்டை: தை பூசத்தை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம்

Avalurpettai: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சாத்தகிரி முருகன் திருக்கோவிலில் வருகின்ற பிப். 11ம் தேதி தை பூசத்தை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பால்குட ஊர்வலம் வரும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.