Minister : ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் அமைச்சர் திடீர் ஆய்வு

Minister : வளத்தி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். வளத்தி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (செப்.,14) இரவு திடீரென அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் பணியில் உள்ளனரா, தேவையான மருந்துகள் இருக்கிறதா எனவும், அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.