People Carrying Torches Blocked The Road In Tindivanam : திண்டிவனத்தில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் சாலை மறியல்.

People Carrying Torches Blocked The Road In Tindivanam : திண்டிவனத்தில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் சாலை மறியல்.
திண்டிவனத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டிவனம் 20-ஆவது வாா்டு நத்தமேடு பகுதியில் தெரு விளக்குகள், சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டுமென நகராட்சியில் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை இரவு திடீரென சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளா் கலைச்செல்வி மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், நகராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கடுமென அவா்கள் கூறியதால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.