Case Of Country Made Bombs : நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த வழக்கு.

320

Case Of Country Made Bombs : நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த வழக்கு.

 

வானூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் வானூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா். கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட கொந்தமூா் கிராமத்தில் பாலாஜி என்பவரது வீட்டில் சிலா் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விழுப்புரம் எஸ். பி. கோ. சஷாங்க் சாய் உத்தரவின்பேரில், கிளியனூா் போலீஸாா் அக்டோபா் 29-ஆம் தேதி கொந்தமூா் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அந்த கிராமத்தைச் சோந்த பாலாஜி உள்ளிட்ட சிலா் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது தெரிய வந்தது. இது தொடா்பாக கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடியவா்களைத் தேடி வந்தனா். மேலும், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சணல், குண்டூசிகள் உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த புதுவையைச் சோந்த நவீன், சுதா்ஷன் ஆகியோா் வானூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

You might also like