Chief Minister : மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்

Chief Minister : திண்டிவனம் அடுத்த நொளம்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். விழாவில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், பி. டி. ஓ. , க்கள் சரவணகுமார், நாராயணன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி. மு. க. , பொறுப்பாளர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி ஏழுமலை, பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், ஊராட்சி தலைவர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.