சிறந்த திருநங்கைக்கான விருது – கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு

956

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு : தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் திருநங்கைகளை சிறப்பிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2021- 22ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைகான விருது தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

அதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் தகுதியான திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விழுப்புரம் கலெக்டர் மோகன் அவர்கள் தனது செய்திக்குறிப்பில் சிறந்த திருநங்கைகான விருது பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவித்துள்ளார்.

மேலும் சிறந்த திருநங்கைகான விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவ்விருது பெற தகுதியானவர்கள் :
  • குறைந்தது ஐந்து திருநங்கைகளையாவது அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும்.
  • அரசாங்கத்தின் உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும்.
  • திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

இந்த தகுதிகளை உடைய திருநங்கைகள் https: //awards. tn. gov. in என்ற இணையதளத்தில் 17 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவானது விருது பெற தகுதி உள்ள நபரை தேர்வு செய்யும். இவ்வாறு கலெக்டர் மோகன் அளித்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறந்த திருநங்கைகான விருதானது திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 15ஆம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like