50 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் கைது | Tindivanam Updates

50 ஆயிரம் லஞ்சம் பெற்ற பத்திர எழுத்தர் & சார்பதிவாளர் கைது
Tindivanam Updates : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அவரது தந்தை நிலத்தை அவரது பெயரில் தானசெட்டில்மென்ட் செய்ய திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு பத்திரப்பதிவு செய்ய ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணத்தை கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து பிரகாஷ் புறப்பட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் நேற்று காலை 11 மணிக்கு திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
மேலும் அங்கிருந்த பத்திர எழுத்தரான திண்டிவனம் செண்கொட்டை தெருவைச் சேர்ந்த சரவணன் மூலமாக சார்பதிவாளர் சங்கரலிங்கத்திடம் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
இதனை ஒழிந்திருந்து பார்த்த போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை பெற்ற சங்கரலிங்கத்தை சரவணனையும் கைது செய்தனர்.
இருவரிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
மேலும் இதுபோன்ற லஞ்சம் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அங்கிருந்த அதிகாரிகளிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
திண்டிவனத்தில் திமுக செயற்குழு கூட்டம் | Tindivanam Updates
Tindivanam Updates : திண்டிவனத்தில் திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியதாவது : விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு ஆலோசனை கூட்டமானது மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் திண்டிவனம் எல் கே டவரில் நாளை 31 தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.
மேலும் ஒன்றிய நகர பேரூராட்சி செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மஸ்தான் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய மின்தடை பகுதிகள்:
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விழுப்புரத்தில் சில பகுதிகளில் மின்தடையானது நடைபெற உள்ளது. விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் நிறுத்தமானது நடைபெற இருக்கின்றது.
விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தமானது நடைபெற இருக்கின்றது.
மேலும் மரகதபுரம், கப்பூர், பிடாகம், மாதிரிமங்கலம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தானுார், கோலியனுார், பிள்ளையார்குப்பம், கூட்ரோடு, பொய்யப்பாக்கம், பானாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மின் நிறுத்தமானது நடைபெற இருக்கின்றது.
நன்னாட்டாம்பாளையம், வி. அகரம், கே. வி. ஆர். , நகர், செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு சாலை, நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், பில்லுார், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம்
ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தமானது நடைபெற இருக்கின்றது.