நெடிமோழியனூர் கிராமத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு

நெடிமோழியனூர் : இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதான தொடர் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் பதிவாகிவருகின்றன.
தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழக்ம் முழுவதும் நூதன முறையில் இதற்கு எதிர்ப்பபுகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.
நெடிமோழியனூர் கிராமத்தில் நூதன முறையில் எதிர்ப்பு:
அகில இந்திய காங்கிரஸ்தலைமையின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் எம்பி இவர்களின் ஆணைப்படி மாவட்ட தலைவர் ஆர் பி ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதல்படி;
மயிலம் வட்டார தலைவர் இல.கண்ணன் நெடிமோழியனூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் எதிரில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தார்.
மேலும் கண்டன முழக்கம் எழுப்பி மோடி அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இதில் நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அன்பழகன், ஏழுமலை, தேவராசு, பூபாலன், ஜெயா, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரெட்டணை கிராமத்தில் எதிர்ப்பு
மயிலம் வடக்கு வட்டார பொறுப்பாளர் மெடிக்கல் எம் செல்வம் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை கண்டித்து;
திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தின் எதிரே கேஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நூதன முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
மைய பாஜக அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதான தொடர் விலை உயர்வை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் கண்டன முழக்கம் எழுப்பி அவரது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இந்த எதிர்ப்பின் போது மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வசுந்தராதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மரக்காணத்தில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள அன்னை சமுதாய கல்லூரி மாணவிகள் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணின் சென்றனர்.
இந்த பேரணியானது மரக்காணத்தில் உள்ள முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பேரணியின்போது பொதுமக்களிடம் காசு நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மாணிவிகள் காசநோயின் அறிகுறிகள் ஆகியவற்றை குறித்தும் எடுத்துரைத்து சென்றனர். காசநோய் குறித்த இந்த விழிப்புணர்வின் போது மாணவிகள் பாடல்கள் பாடியும், நாடகங்கள் நடித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மரக்காணம் ஒன்றிய பெருங்குழு தலைவர் தயாளன், மரக்காணம் பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் மற்றும் துணை சுகாதாரத் துறையினர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.