பத்தாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் | Rape Attempt News in Villupuram Dist.

பத்தாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் – Gang Rape in Villupuram
Gang Rape in Villupuram : விழுப்புரம் அருகே 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செ. குன்னத்துாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சசிகுமார் இவருக்கு வயது 28. இவர் அதே பகுதியில் 15 வயது உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக விழுப்புரம் மகளிர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சசிகுமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சசிகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
போலீசார் விசாரணையில் சிறுமியை மேலும் சிலர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – Rape news in Gingee
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல் தளவாய் கிராமத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செஞ்சியை அடுத்த மேல் தளவாய் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்றவர் 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை கொடுத்த போது சிறுமி கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் .
சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுபோன்று தொடர் பாலியல் வன்முறைகள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வருவது மக்களிடையே கோபத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பாலியல் வன்கொடுமைகளை தடுக்க போலீசாரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விழுப்புரம் மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வரதட்சணை கொடுமை செய்த தம்பதி உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை
விழுப்புரத்தில் மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாமியார் மாமனார் உள்பட 3 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த மேல் அனுமார் கோவில் தெருவை சேர்ந்த ரத்தன்சந்த்போரா மகள் ராஜகுமாரி, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்த மாவீர்சன் கட்டாரியா மகன் அஜித்குமாருக்கு 2000ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
(அஜித்குமார் லண்டனில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்)
திருமணமான சில மாதங்களில் மருமகளை 20 லட்சம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நரேந்திர கட்டாரியா, அசோக் கட்டாரியா,
திருப்பதி மனைவி ஆர்த்தி, சகோதரி லலித்ராம்சாஆகியோர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோ குற்றம் சாட்டப்பட்ட மாவீர்சன் கட்டாரியா மற்றும் கவுசல்யாபாய் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
ஆர்த்திக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் நரேந்திர கட்டாரியா, அசோக் கட்டாரியா ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அஜித் குமார் லண்டனில் இருப்பதாலும் வேறு ஒரு வழக்கு நடப்பதாலும் அவருக்கு தற்போது தண்டனை கூறவில்லை.