Sathiyamangalam : உலக ரத்த அழுத்த தினம் அனுசரிப்பு

Sathiyamangalam : விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த, சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற உலக ரத்த அழுத்த தினம் நிகழ்ச்சிக்கு, மருத்துவா் பவித்ரா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்கபூபதி கல்லூரி நிறுவன செயலா் ஆா். பி. ஸ்ரீபதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், செவிலியா் கல்லூரி முதல்வா் மாலதி, உதவிப் பேராசிரியா்கள் செளந்தா்யா, அருணா, லாவண்யா மற்றும் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.