May Day: இந்தியாவில் மே தினம் வந்தது எப்படி?

443

May Day: சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 1923ம் ஆண்டு தொழிலாளர் தினம் முதல் முதலாக மே 1 அன்று சிறப்பிக்கப்பட்டது.

பொதுவுடைமைவாதி, சமூக சீர்திருத்தவாதி என போற்றப்பட்ட ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மெரினா கடற்கரையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த கூட்டத்தில் அன்றைய தலைவர்கள் சுப்பிரமணிய சிவா, எம்.பி.எஸ். வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கி இருந்தனர்.

தேவி பிரசாத் ராய் சௌதரி வடிவமைத்த உழைப்பாளர் சிலை ஜனவரி 25, 1959 அன்று ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் திறந்து வைக்கப்பட்டது.

 

You might also like