Chief Minister : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

213

Chief Minister : வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளுக்கு, கிளியனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

அருவாப்பாக்கம், தென்சிறுவளூர், ஆதனப்பட்டு, கிளியனுார், தேற்குணம், தைலாபுரம், கொந்தமூர் ஆகிய 7 ஊராட்சிகளுக்கு நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் உஷா முரளி துவக்கி வைத்தார். துணைச் சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, வானுார் பி. டி. ஓ. , க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன், வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கிளியனுார் தி. மு. க. , ஒன்றிய செயலாளர் ராஜூ, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் துறை உட்பட 14 துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.

You might also like