Tindivanam : மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி.

404

விழுப்புரம் மாவட்டத்தில் Tindivanam அருகே உள்ள ஊரல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 35.  இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை இவர் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டிட வேலை பார்த்து வந்தார். மொட்டை மாடியில் வேலை பார்த்து வந்த சுரேஷ் எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்சார கம்பியை பிடித்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சுரேஷ். இதுகுறித்து Tindivanam ரோஷனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இதனிடையில் சுரேஷின் உடலை வாங்க மறுத்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 50 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like