திண்டிவனத்தில் நிலத்தகராறில் மூதாட்டி கொலை?

405
திண்டிவனம், கிடங்கல்1 பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மனைவி கற்பகம்.
இவர்களுக்கு உதயக்குமார், ராஜிவ்காந்தி, முருகதாஸ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில், முருதாஸ் புதுச்சேரியில் வசித்து வருகிறார். அவர்களின் மற்ற 2 மகன்களும் திண்டிவனத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே முடி திருத்தகம் கடை வைத்துள்ளனர்.
ஒரு சில நாட்களாக  உதயக்குமாரின் குடும்பத்திற்க்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜான்பாஷாவுக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் உதயக்குமார், தனது வீட்டில் 2-வது மாடிகட்டி வருகிறார். இன்று காலை 2-ம் தளம் கான்கிரீட் பணி நடக்க இருந்தது. அப்போது, உதயக்குமாரின் குடும்பத்தினருக்கும், ஜான்பாஷா குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உதயக்குமாரின் தாய் கற்பகம் தாக்கபட்டார்.
இதனால் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக எடுத்து செல்ல முயன்ற போது, அவர் உயிரிழந்தார்.
இது குறித்து உதயக்குமார், திண்டிவனம் போலீசில் புகார் அளித்துள்ளார்.அதில், இன்று ஏற்பட்ட இடப்பிரச்சினையில், எனது தாயையும், என்னையும் ஜான்பாஷா, அவரது தம்பி, காதரியன் ஆகியோர் சேர்ந்து தள்ளி விட்டதால், எனது தாய் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். எனவே திட்டமிட்டு எனது தாயை கொலை செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார்.
அதன் பேரில் திண்டிவனம் போலீசார், சந்தேக மரண வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
You might also like