விக்கிரவாண்டி : ஆன்லைன் லாட்டரியில் ஈடுபட்ட நபர் கைது

606

திண்டிவனம் அருகே உள்ள  விக்கிரவாண்டி பகுதிகள் ஆன்லைனில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக எஸ்பி ஸ்ரீநாதவுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் விக்ரவாண்டி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் சில போலீசார் கொண்ட குழுவு மதுரபாக்கம் புற்று கோவிலிலுள்ள பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாகனமானது நிறுத்தாமல் போலீசார் மீது ஏற்றுவது போல வந்துள்ளது. அந்த காரை துரத்தி சென்று போலீசார் பிடித்தனர்.

 பின்பு அந்த காரை ஓட்டிச் சென்றவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் நீண்ட நாட்களாக லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.  போலீசார் தேடி வந்த அந்த மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்தவர் இவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.

போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர் புதுச்சேரி பகுதியில் உள்ள மூலக்குளம் பகுதியில் தங்கியிருந்தது விசாரணையில் வெளி வந்தது.  இதனையடுத்து போலீசார் அவரை கைது  செய்தனர்.  மேலும் அவரிடமிருந்து  3 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமும் ஒரு ஐபேட், 3 ஆண்ட்ராய்டு போன்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையம் வந்த ஸ்ரீ நாதா அவர்கள்  குற்றவாளியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையை முடித்த பின்பு அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில் “விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி ஈடுபட்டு வந்த ஸ்ரீதர் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த ஸ்ரீதர் மீது ஏற்கனவே விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தேடி வந்த இவர் தற்போது பிடிபட்டுள்ளார். துரிதமாக நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டுகிறேன்” என்றார். 

You might also like