விழுப்புரம் : திடீரென கார் தீப்பற்றி எறிந்து நாசம்

451

விழுப்புரம் அடுத்த  அபேஷா தக்கா தெருவை சேர்ந்த விஜய் கார்த்தி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது சொகுசு காரை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். பிற்பகல் 3 மணி அளவில் அந்த காரானது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

 இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் கார்த்தி  அருகில் இருந்தவர்களின் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார்.ஆனால் தீயை அணைக்க முடியாததால் காரானது முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

 தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

 இந்த தீ விபத்தில் சேதமடைந்த காரின் மதிப்பானது ரூபாய் 10 லட்சம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 விசாரணையின் முடிவில் நான்கு சக்கர வாகனமானது எப்படி தீப்பிடித்தது என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. இச்சம்பவமானது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

You might also like