திறந்த வெளியில் கல்வி கற்கும் மாணவர்கள் – Vanur News

Vanur News : கல்வி என்பது தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கட்டிடங்களும் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதனால் Vanur அடுத்த சின்ன கொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் திறந்தவெளியில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்து விட்டதால் அரசு உத்தரவின்படி அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
பின்பு தற்காலிகமாக பள்ளி மாணவர்கள்அனைவரும் நாடக மேடையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மாணவ மாணவிகளுக்கு நாடக மேடையிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேடையின் இருபுறமும் தற்காலிகமாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறங்களில் உள்ள சத்தங்கள் அதிகப்படியாக இருப்பதால் மாணவர்களால் சரியாக கல்வி கற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதியும் இன்னும் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடமில்லை மாணவர்களும் மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே மாணவர்களுக்கு அரசின் புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டித்தர நடவடிக்கை வேண்டுமென ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். Vanur நகராட்சியை சேர்ந்த உரிய அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டுமென நம் திண்டிவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மாணவ மாணவிகளுக்கு கழிப்பிட வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.