திண்டிவனம் அருகே பைக் மோதி போலீஸ் பலி | திண்டிவனம் க்ரைம் செய்திகள்

திண்டிவனத்தில் 6 லட்சம் மதிப்பிலான நகை திருட்டு
திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கூட்டுரோட்டை சேர்ந்தவர் சுபேதா. கணவனை இழந்த, இவர் சுயமாக வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சுபேதாவின் உறவினர் அறுவை சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உதவி செய்வதற்காக கடந்த 24ஆம் தேதி சுபேதா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சுபேதா மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுபேதா திண்டிவனத்திற்கு சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் உள்ள 6 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து நகை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பைக் மோதி போலீஸ் பலி
மரக்காணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சென்னையை சேர்ந்த போலீஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி. இவர் பூந்தமல்லி மதுவிலக்கு அமல் பிரிவு தலைமை காவலராக பணியாற்றினார்.
இவர் நேற்று தனது டிவிஎஸ், ஸ்டார் சிட்டி பைக்-ல்புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றுள்ளார். ஈசிஆர் சாலையில் சென்ற இவரது வாகனத்தை திண்டிவனம் அடுத்த விநாயகர் புரத்தை சேர்ந்த தர்மபாலன் மகன் கமலேஷ் என்பவர் ஓட்டி வந்த ஹீரோ டீலக்ஸ் பைக் மோதியது.
மேலும் கமலேஷ் உடன் அவரது நண்பர் பொன்னுசாமி மகன் தினேஷ் குமார் உடன் இருந்துள்ளார். பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ரத்தினசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். மேலும் கமலேஷ் தினேஷ்குமார் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.
இந்த இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் :
விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே அதிக விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, விபத்து தடுப்பு பிரிவு நடவடிக்கைகள் போலீசாரால் ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே அனைத்து வாகனங்களும் அதி வேகமாக செல்வதால் அதிகப்படியான விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் பள்ளியைவி ட்டு சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் நேரிடக் கூடும் என்பதால் மக்கள் போக்குவரத்து போலீசில் புகார் அளித்தனர்.
அதனை அடுத்து வாகனங்கள் சீரான வேகத்தில் செல்வதற்காக பள்ளி அருகே உள்ள சாலையின் இருபுறங்களிலும் பேரிகேர்டு மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன.