விழுப்புரம் – இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத் திட்டம்

1,318

தமிழக அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி வருகிறது.

இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும்.

உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும் அத்துடன் சலவை பெட்டியும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெற விரும்புகிறவர்களின் வயது 20 – 45க்குள் இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயின்றதற்கான சான்றிதழை வைத்திருத்தல் அவசியம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் ஆண்டு வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கணவனை இழந்த விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முன்னரே பயன்பெற்றிருப்பின் மீண்டும் பயன்பெற சில தகுதுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை இத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி பெற்று பயன் பெற்றிருப்பின்.

மீண்டும் இத்திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி பெற 7 ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும். 7 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கான தகுதியை அடைய முடியும்.

இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் – இன்றைய மின்தடை பகுதிகள் :

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளுக்கு  மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே. வி. ஆர். , நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதுகளுக்கு மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி. அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லுார், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதுகளுக்கும் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், பிள்ளையார்குப்பம், கோலியனுார் கூட்ரோடு உள்ளிட்ட பகுதுகளுக்கும் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யப்பாக்கம், திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம் ஆகிய பகுதுகளுக்கும் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதியத்துார் கோவிலில் தேர் திருவிழா

கண்டாச்சிபுரம் ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் திருத்தேர் விழா நடபெற்றது. அதன்காரண்மாக, குளக்கரையில் இருந்து கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர், வள்ளாலகண்டன் கோட்டை அழித்தல், அம்மன் குறத்தி குறி சொல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. பக்தர்கள் பிரம்ம கபாலம் மற்றும் தீச்சட்டி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

மேலும் நள்ளிரவு 12: 30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 7: 00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மகா கும்பமும் நடபெற்றது. இந்த தேர்திருவிழாவின் ஏற்பாடுகளை ஊர் மக்களும், கோவில் நிர்வாகிகளும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

You might also like