உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிவது? | Nam Tindivanam

1,597

Nam Tindivanam : உங்கள் ஊரின் வரவு செலவு கணக்குகளை அறிந்து கொள்ள எளிய வழி :

உங்கள் பஞ்சாயத்து (அ) ஊரின் வளர்ச்சிக்காக அரசாங்கம் தருகின்ற நிதியை கிராம பஞ்சாயத்தானது எவ்வாறு செலவு செய்துள்ளது என அறிய வேண்டுமா? மேலும் எவ்வளவு தொகை மீதமுள்ளது என அறிய வேண்டுமா?

பஞ்சாயத்து ஊரின் வரவு செலவு கணக்குகளை அறிந்து கொள்வதற்கான எளிய வழிமுறையை இந்திய அரசானது ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைவருமே இந்த வசதியை பயன்படுத்தி அவர்களது ஊரின் வரவு செலவு கணக்குகளை அறிந்து கொள்ள முடியும்.

இதோ அந்த எளிய வழிமுறை:

  • பட1: https://egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.
  • படி 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.
  • படி 3: Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.
  • படி 4: Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.
  • படி 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை தேர்வு செய்யவும் .
  • படி6: உங்களது மாநிலத்தினை தேர்வு செய்யவும்.
  • படி 7: Village Panchayat என்பதனை தேர்வு செய்யவும்.
  • படி 8: உங்களது மாவட்டத்தினை தேர்வு செய்யவும்.
  • படி 9: உங்களது வட்டாரத்தினை தேர்வு செய்யவும்.
  • படி 10: உங்களது கிராமத்தினை தேர்வு செய்யவும்
  • படி 11: கணக்கு தேவைப்படும் மாதத்தினை தேர்வு செய்யவும்
  • படி 12: உள்ளீட்டு குறியினை சரியாக பதிவிடவும்.
  • படி 13: Get Report என்பதனை க்ளிக் செய்யவும்

இந்த முறையை பயன்படுத்தி உங்கள் ஊரின் வரவு செலவு கணக்குகளை அறிந்து கொள்ளுங்கள்.

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா :

Nam Tindivanam : திண்டிவனம் அடுத்த மயிலம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா நடைபெற்றது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று காலை பங்குனி 2ம் நாள் விழாவையொட்டி, காலை 6: 00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

மேலும் 11: 00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனைக்குப் பின், வெள்ளி வாகனத்தில் உற்சவர் மலைவலம் காட்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8: 00 மணிக்கு உற்சவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வலம் வந்தார்.

இந்த பெருவிழாவின்  ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

You might also like