பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை | Tindivanam News

517

பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் நடைபெற்றது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு பாஜக நகர தலைவர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், நகர செயலாளர் ராதிகா துணைத்தலைவர் செங்கேணி, ஊடகப்பிரிவு துறை சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் நகர மகளிரணி லதா, கௌரி, ஊடகப்பிரிவு சீனிவாசன், தொழில்நுட்ப பிரிவு தலைவர் தரணி, வழக்கறிஞர் பிரியங்கா மற்றும் நகர இளைஞரணி தலைவர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

 

விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் மாவட்ட பொருளாளர் ஆதவன் மற்றும் பொது செயலாளர்கள் ஜெயக்குமார், பாண்டியன், பொருளாளர் சுகுமார், ஆகியோர் இக்கூட்டத்தில் முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் திட்டத்தை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஊராட்சி தலைவர்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படும் ஆளும் கட்சி நிர்வாகிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியில் நகர தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

You might also like