செஞ்சியில் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | Gingee Crime News

672

செஞ்சியில் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | Gingee Crime News

Gingee Crime News : செஞ்சி அருகே உள்ள நெகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கு வயது முப்பத்தி ஏழு. இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கஞ்சா விற்பனை செய்தல் போன்ற பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாமோதரன் கஞ்சா விற்பனை செய்ததாக செஞ்சி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட தாமோதரனை கடலூர் சிறையில் அடைத்தனர்.

இவர் இதுபோன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் இவருடைய செயல்களை தடுக்கும் விதமாக தாமோதரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தாமோதரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டர் மோகனின் உத்தரவால் தாமோதரனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு பதிவு செய்தனர்.

ஏற்கனவே தாமோதரன் சிறையில் இருப்பதால் இந்த குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நகலானது கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

 

விழுப்புரம் அருகே ஏரியில் சேற்றில் சிக்கிய நபர் உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே சோழனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.

37 வயதான கூலித் தொழிலாளியான ஆறுமுகம் ஏரியில் ஆழமான பகுதியில் குளிக்க சென்றதால் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஏரியில் இருந்த ஆறுமுகத்தை உயிரோடு மீட்க முயற்சி செய்தனர்.

ஆனால் ஏற்கனவே இறந்து இருந்ததால் ஆறுமுகத்தை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மரக்காணம் அருகே லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி

மரக்காணம் அருகே முன்னார் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி நெல் அறுவடை இயந்திர டிரைவராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று திண்டிவனத்திலிருந்து முன்னூருக்கு புதுச்சேரி சாலை வழியாக இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் வீரமணி லாரியின் பின்புறம் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

அதானால் லாரியின் பின்புறம் சக்கரமானது அவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த லாரியை ஓட்டி வந்த  லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவை போன்ற விழுப்புரம் மாவட்ட செய்திகளுக்கு Nam Tindivanam இணையத்தை Subscribe செய்யுங்கள்.

You might also like