காங்கிரஸ் கட்சியினர் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் | Congress Party

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ( Indian National Congress ) அகில இந்தியத் தலைமையின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு Congress கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் எம்பி இவர்களின் உத்தரவுப்படி விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திண்டிவனத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 10 மணி அளவில் திண்டிவனம் தலைமை தபால் அலுவலகத்தின் எதிரில் பெட்ரோல் டீசல் கேஸ் இவற்றின் விலைகளை உச்சத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு ஆர் பி ரமேஷ் அவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் நகர தலைவர் எம் வினாயகம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், மாவட்ட முன்னாள் தலைவர் தனுஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப துறை மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், ஐஎன்டியூசி தலைவர் சூரியமூர்த்தி, விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், கார்த்தி, முருகையன், வழக்கறிஞர்கள் அஜிஸ், பொன் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கட், ஜானகிபதி, சேவா தளம் சசிகுமார், பழனிவேல், தகவல் தொழில்நுட்பம் துறை ஜெய்கணேஷ், ஐயப்பன்,
திண்டிவனம் நகர துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, மயிலம் தெற்கு வட்டாரத்தை பலராமன், கலிவரதன், முருகவேல், காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.