Gingee :பெண் கர்ப்பப்பையில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றம்

Gingee : பெண் கர்ப்பப்பையில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றம்
Gingee ல் பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 6 கிலோ கட்டியை அகற்றி செஞ்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்திருக்கின்றனர்.
செஞ்சி அடுத்த அணையேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கு சில மாதங்களாக வயிறு திடீரென பெரியதாகி வலி ஏதும் இன்றி இருந்து வந்தது.
இதற்கு சிகிச்சை பெற செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பப் பையில் ஒரு கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.
அதனையடுத்து Gingee அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த் தலைமையில் டாக்டர் ராஜலட்சுமி, மயக்கவியல் மருத்துவர் சரண்ராஜ், மற்றும் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
மேலும் சிகிச்சையின் முடிவில் 6 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். ராணி தற்போது நலமுடன் இருக்கின்றார்.
எல்லீஸ்சத்திரம் தடுப்பணையின் மண்ணரிப்பை தடுக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்
விழுப்புரம் மாவட்டம் எல்லீஸ்சத்திரம் தடுப்பணையின் கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
மேலும் அதனை உடனடியாக கற்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பித்தார்.
உத்தரவின் அடிப்படையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எல்லீஸ்சத்திரம் தடுப்பணையின் கரை ஓரம் மண் அரிப்பை தடுக்க கற்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நம் திண்டிவனம் Facbook & Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.