Nam Tindivanam | திண்டிவனம் கமிட்டியில் லஞ்சம்

1,370

Nam Tindivanam |ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் லஞ்சம்

Nam Tindivanam : திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ( கமிட்டி ) உளுந்து, காராமனி மூட்டைகளை எடைபோடவும் சாக்கு மூட்டைக்கு மாற்றவும்,

ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் வீதம் லஞ்சம் பெறப்படும் வீடியோவானது வெளியாகி திண்டிவனம் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம்-செஞ்சி சாலையில் திண்டிவனம் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடமானது செயல்பட்டு வருகிறது.

இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறுவாடி, நெய்குப்பி, விளங்கம்பாடி, சாரம், ஒலக்கூர், மரக்காணம்,

என பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்களது உளுந்து, நெல், மணிலா, எள்ளு, காராமணி போன்ற தானிய வகைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து கமிட்டியில் கொடுக்கின்றனர்.

விவசாயிகளிடம் லஞ்சம்

அவ்வாறு கொண்டு வரும் விவசாயிகளிடம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தாணியங்களை மூட்டையிலிருந்து ஒழுங்கு முறை விற்பனை கூட மூட்டைக்கு மாற்றுவதற்கு,

ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் மேலும் எடை போடுவதற்கு மூட்டைக்கு 20 ரூபாய் என 30 ரூபாய் வீதம் லஞ்சம் வாங்குகின்றனர்.

விவசாயிகளிடம் உள்ள தானிய மூட்டைகளை எடை போட மூட்டை ஒன்றுக்கு 30 ரூபாய் லஞ்சம் வாங்குவதை விவசாயிகள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் மூட்டை எடுபோடுவதற்கு லஞ்சம் பெற கூடாது எனவும் அப்படி லஞ்சம் பெற்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஊழியர்கள் லஞ்சம் பெறுவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like