Vikravandi ல் சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவ, மாணவிகள் மயக்கம்

1,140

Vikravandi ல் சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவ, மாணவிகள் மயக்கம்

Vikravandi  வட்டம் வெங்கங்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பிற்பகல் காணை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனை சார்பில் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கினர்.

மாணவ, மாணவிகள் பள்ளியிலேயே அதை சாப்பிட்டுள்ளனர். சற்று நேரத்தில் மாணவிகள் : சீனுவாசன் மகள் ராகவி, 12: பலராமன் மகள் காவியா, 14:

ஏழுமலை மகள் தனலட்சுமி, 14: சக்திவேல் மகள் புவனேஸ்வரி, 15: ஜோதி மகள் காவியா, 11: சந்திரன் மகள் மஞ்சுளா, 11: ஏழுமலை மகள் அர்ச்சனா, 15

தயாநிதி மகள் ஹேம ரோஷினி, 11: லோகநாகன் மகள் கிருபாவதி, 11: ஏழுமலை மகள் மகாலட்சுமி, 11: முரளி மகள் ரேகா, 11 ஆகிய 20 மாணவிகள் உட்பட 31 பேருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

உடனே ஆசிரியர்கள், மருத்துவ குழுவினர் மாணவர்களை காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இதில் மூன்று மாணவர்களுக்கு மட்டும் வாந்தி தொடர்ந்து இருந்ததால் அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்தனர்.

முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ மனையில் அனுமதி

இந்நிலையில் வெங்கந்துார் கிராம மக்கள் அனைத்து மாணவர்களையும் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் நேற்று மாலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், புகழேந்தி எம். எல். ஏ. , ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா,

வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி ஆகியோர் மருத்துவ மனைக்கு நேரில் வந்து மாணவர்களையும் , பெற்றோர்களையும் சந்திந்து ஆறுதல் கூறினர்.

மேலும் மருத்துவமனை கல்லுாரி டீன் குந்தவி தேவி, ஆர் . எம். ஓ. , வெங்கடேசன், ஆகியோரிடம் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டர்.

சத்து மாத்திரைகள் சாப்பிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மயக்க மடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like