Villupuram மகளிர் கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு

Villupuram அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் காலி இடங்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.
விழுப்புரம் எம். ஜி. ஆர். , மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கணேசன் செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள 19 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 18ம் தேதி நடக்கிறது.
பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுாரியில் 17ம் தேதி வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அன்று காலை 10: 00 மணி முதல் 1: 00 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும்.
இக்கல்வியாண்டில் ஏற்கனவே விண்ணப்பித்த இடம் கிடைக்காத மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி, இ மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த மாணவிகள் மட்டும் வரும் 18ம் தேதி கலந்தாய்விற்கு வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.