SRM வேளாண் கல்லூரியின் நேரடி பயிற்சி

SRM வேளாண் கல்லூரியின் நேரடி பயிற்சி
SRM வேளாண்மை அறிவியல் கல்லூரியில் வேளாண் துறையில் இளம் அறிவியல் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குழு-9 (திண்டிவனம்), பேராசிரியர்கள் திரு. மாரிமுத்து, திரு. ராஜசேகரன்,திரு.நவீன் குமார்,திரு.முகமது இஸ்மான்நுல்லா ஆகியோர் தலைமையில்
இயற்கை வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் செம்மை கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் நேரடி பயிற்சி நடத்தினர்.
இப்பயிற்சி முகாமில் துணை வேளாண்மை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம தலைவர்,வார்டு கவுன்சிலர்,மற்றும் 50க்கும் மேலான விவசாயிகள் பங்கேற்றனர்.
அதன்படி ஊரல் கிராமத்தில் இந்த வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம், பஞ்ச காவியம்,3ஜி கரைசல், அமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம், முதலிய இயற்கை விவசாய இடு பொருட்களை செய்து காட்டி விளக்கினர்.
மாணவர்களின் இந்த பயிற்சிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.