Tindivanam News : டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் இளைஞர் பலி

Tindivanam News : டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் இளைஞர் பலி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள வைடப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் நரேஷ் குமார் வயது 23, இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அதே கிராமத்தை சேர்ந்த அவரது பெரியப்பாவின் மகன் நாராயணன் வயது 36 என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 29-ஆம் தேதி உயிரிழந்துள்ளார், இந்த துக்கநிகழ்வுக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்த நரேஷ்குமார் தொடர் விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு டிராக்டர் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது வைடப்பாக்கத்தில் இருந்து லாலாபேட்டை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாடு சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அப்போது நரேஷ் குமார் திடீரென பிரேக் அடித்துள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நரேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.