Government Bus Vipattu News :புதுவை அரசுப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: 10 பேர் காயம்.

Government Bus Vipattu News :புதுவை அரசுப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: 10 பேர் காயம்.
மரக்காணம் அருகே புதுவை மாநில அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து – புதுச்சேரி நோக்கிச் புதுவை மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பேருந்தை புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சோந்த கோபி கிருஷ்ணன் (46) ஓட்டினாா். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.
மரக்காணம் அடுத்த அகரம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதுவது போல சென்றது.
அப்போது, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநா் குழந்தைகள் மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பினாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநா் கோபிகிருஷ்ணன், பயணிகள் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, வாகனங்கள் மூலம் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.