Holiday : விடுமுறை முடிந்து சென்னை சென்ற வாகனங்கள் பைபாசில் அணிவகுப்பு

125

Holiday : விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பியதால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென் மாவட்டத்திலிருந்து சென்னையில் பணிபுரிபவர்கள், கடந்த சனி, ஞாயிறு விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர் மற்றும் சுற்றுலாவாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களுக்குச் சென்றனர்.

இவர்கள் நேற்று பிற்பகல் 2: 00 மணிக்கு மேல் சொந்த ஊர்களுக்கு கார், பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்களில் திரும்பினர்.

இதனால் திருச்சி – சென்னை சாலையில் பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியாதபடி போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.

விக்கிரவாண்டி டோல் கேட்டில் மாலை 4: 00 மணி முதல் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டதால் சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரு லேன்களை திறந்து எட்டு லேன்களில் வாகனங்கள் கடந்து செல்ல அனுமதித்தனர்.

நேற்று விக்கிரவாண்டி டோல் பிளாசாவை 45 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. இது சராசரியாக செல்லும் வாகனங்களை விட 15 ஆயிரம் வாகனங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like