Mailam : அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

205

Mailam : மயிலம் அருகே கரசானூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரங்கனியில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்வினி யோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் சீரற்ற மின்மினி யோகத்தால் கரசானூரில் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்துக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நேற்று முன்தினம் இரவு 10: 30 மணி வரை மின்வினி யோகம் செய்யப்படவில்லை. இது குறித்து தகவலின் பெயரில் வானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் பரங்கனி மின்வாரிய அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மின்மினி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து கரசானூர் கிராம மக்களுக்கு மீண்டும் மின்மினி யோகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1. 30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like