Tribals : இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடியினர் மனு அளித்தனர்

114

Tribals : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த கன்னலம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் குடும்பத்தினர், இலவச வீட்டு மனை கே ட்டு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘மேல்மலையனூர் தாலுகா கன்னலம் கிராமத்தில், 5 பழங்குடி இருளர் குடும்பங்கள், எவ்வித அடிப்படை வசதிகளின்றி கடந்த இரண்டு தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

அவர்கள் அரசின் அடையாள அட்டைகளோடு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் வீட்டு வரி போன்றவை செலுத்தி வருகின் றனர். இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டி கன்னலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதே போல், அவர்களுக்கு அதே கிராமத்தில் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

You might also like