vikravandi : கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படை துவக்கம்

115

vikravandi : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி பரிசு பொருள் விநியோகத்தை தடுக்க பறக்கும்படை கண்காணிப்பு குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் ஜூலை 10ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தல் தேதி அறிவித்த 10ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணைய உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றிடும் விதமாகவும் பறக்கும் படை கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப்பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுத் திடும் வகையில் 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 3 நிலையானகண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து, இந்த கண்காணிப்பு குழு வாகனங்களை, கலெக்டர் பழனி நேற்று பிற்பகல் தொடங்கி வைத்தார்.

You might also like