Vikravandi : காவல்நிலையம் முன் மாற்றுத்திறனாளி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

112

Vikravandi : விக்கிரவாண்டி வட்டம், வா. பகண்டை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன். மாற்றுத் திறனாளியான இவரிடம் தென்னவராயன்பட்டு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (45) தூய்மைக் காவலா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2. 5 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தாராம். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், வெங்கடேசனிடம் பண மோசடி செய்த ரமேஷ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, விக்கிரவாண்டி காவல் நிலையம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். விழுப்புரம் டிஎஸ்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, ஆா்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியத் தலைவா் பி. அய்யனாா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சங்கரன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் பி. முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

You might also like