Govindasamy : அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

240

Govindasamy : திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் அரசு கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் இடப்பற்றாக்குறை காரணமாக காலை மாலை என இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. முதல் அரசு உத்தரவின் பேரில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்க பட்டத்துடன் ஒரே சிப்ட் முறையில் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை கல்லூரிக்கு வந்ததும் ஒரே ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்பதை அறிந்த மாணவர்கள், நாங்கள் பகுதி நேர வேலை பார்த்து வருவதால் எங்களுக்கு ரெண்டு ஷிப்ட் முறையிலேயே வகுப்புகள் நடத்த வேண்டும் எனக் கூறி கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் இடம் வாக்குவாதம் செய்ததுடன் வகுப்புகளுக்கு செல்லாமல் திடீரென கல்லூரி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர். இதைப்பற்றி தகவல் அறிந்த ரோஷனை போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யார் யாருக்கு ஷிப்ட் முறை வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் மாணவர்கள் கடிதம் அளிக்கலாம். இந்த போராட்டத்தில் மாணவிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

You might also like