Tindivanam : போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Tindivanam : திண்டிவனத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாலுகா அலுவலகம் எதிரே, பாரத் இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
போதைப் பொருள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி பொதுமக்களிடம் வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தனியார் நர்சிங் கல்லுாரி தாளாளர் முத்துலட்சுமி, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் துரைசோழன், ரஜினிகாந்த் பாலாஜி, தரணி, நரசிம்மன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.