Melmalayanur : அம்மாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள்

136

Melmalayanur : அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 170 சிறப்பு பஸ்களும், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, காஞ்சீபு ரம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து மேல்மலையனூருக்கு 125 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

மேலும் 7-ந்தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 5, 6, 7-ந்தேதிகளில் அரசு பஸ்களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) 105 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 165 பஸ்களும், 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 90 பஸ்களும் ஆக மொத்தம் 360 சிறப்பு பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், திருவண்ணாமலை (வழி-ஆற் காடு, ஆரணி), திருவண்ணாமலை (காஞ்சீபுரம், வந்தவாசி ) ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நாளை 30 பஸ்களும், நாளை மறுநாள் 30 பஸ்களும் என மொத்தம் 60 பஸ்கள் இயக்கப்படுகிறது.

You might also like